இனிய உறவுகளே!
சட்டமன்றம் கூடுகிறது.
அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான
பட்டியலை முதல்வர் வாசிக்கிறார்.
அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்று இருக்கின்றனர்.
கவுண்டர்களுக்கு அதில் இடம் இல்லை.
இதைக்கண்டு வெகுண்டெழுந்த செழியனார் வன்னியர் முக்குலத்தோருக்கெல்லாம் இடம் இருக்கிறது. கொங்கனுக்கு ஏன் இடமில்லை?
அவன் என்ன மிட்டா? மிரசா? என
கேள்விகளால் துளைக்கிறார்.
பதில் சொல்ல முடியாத கலைஞர் அமர்ந்துவிட்டார்.
வன்னியர் இனத்தை சேர்ந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி எழுந்து-
இது சட்டசபை!
பொதுகூட்டமல்ல!-என கலைஞருக்கு
வக்காலத்து வாங்குகிறார்.
உன் சாதிக்கு கிடைத்ததால் சந்தோஷப்படுகிறாய்!
ஏன் என் சாதிக்கு ஏன் இல்லை என்று கேட்டாயா? என வினவுகிறார்.
இத்தனை சூழ்ச்சிக்கும் காரணம்
பண்ருட்டியார்.
இனத்திற்காக எதையும் செய்ய
துணிவார்.
அடுத்து என்ன நடந்தது?
செழியனார் என்ன செய்தார்.
என்பது நாளை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக