செவ்வாய், 2 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-19

இனிய உறவுகளே!

1971- சட்டசபைக்கு தேர்தல்.
கலைஞர் முதல்வர் ஆகிறார். கோவை செழியனார் காங்கேய சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகிறார்.

சட்டமன்றம் கூடுகிறது.

ஏற்கனவே நிலுவையில் இருந்த தீர்மானம். கொங்கு இன மக்களை பிற்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று.

இணைப்பது சரி! அதற்கான புள்ளிவிபரங்கள் அரசிடம் இல்லை.
அதுவின்றி சட்டமன்றத்தில் பேசமுடியாது.

அப்போது சட்டமன்ற இணைச்செயலாளராக இருந்த திரு.C.K.இராமசாமி அவர்கள் அதற்காக
புள்ளி விபரங்களுக்கு அப்போதுதான் ஏற்பாடு செய்தார்.

உள்ளாட்சித்துறையின் இயக்குநரின் உதவியாளாராக இருந்த திரு.வையாபுரிக்கவுண்டர் அவர்கள்
பெருமுயற்சி மேற்கொண்டு;

கொங்கு வேளாளக்கவுண்டர் மக்கள் தொகை எவ்வளவு?
படித்தவர்கள் எத்தனைபேர்?
பொருளாதார நல்ல நிலையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?
என்று கணக்கெடுத்து தந்தார்.

அரசு 1920-ல் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதுவும் சரியான புள்ளிவிபரங்களாக இல்லை.

இந்த விபரங்களையெல்லாம் சேகரித்து சட்டமன்றத்தில் பேசினார்.

அதற்கு கலைஞர் என்ன சொன்னார்?

இதை நிறுத்த கலைஞர் கையாண்ட
ராஜதந்திரம் என்ன?

அதற்கு தடையாய்
இருந்தவர்கள் யார்?

அதற்குள் 1972- ம் வந்து விட்டது!

என்ன நடந்தது.....

நாளை..


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...