திங்கள், 1 ஜூன், 2020

திரும்பிப்பார்க்கிறேன்-10

இனிய உறவுகளே!

தமிழர் என்ற இனவுணர்வை எங்கும் எழுப்பி ஆட்சி அதிகாரத்திற்கு வர திமுக திட்டமிட்டு தன் பரப்புரை தமிழமெங்கும் எழுப்பி வந்தது.

அதை எழுப்பும் தலைவர்களுள் இளைய
தலைவர்களாக சம்பத் கலைஞர் செழியனார் நாவலர் போன்ற சம காலத்தலைவர்கள் இருந்தார்கள்.

ஒவ்வொரு பிரிவாக பிரித்து அதற்கென செயலர்களை நியமித்து பணி செய்தனர்.

மாணவர்கள் அமைப்பே அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்ற கருத்தை ஆணித்தரமாக முன் வைத்தார்.

எடுத்து வைக்கும் கருத்தில் 100% உறுதியாய் இருப்பார். ஏற்காவிடினும்
எடுத்த கருத்தில் என்றும் தன்னை சமரசம் செய்து கொள்ளமாட்டார்.

கொண்ட கொள்கையில் பிடிவாதக்காரர் என பெயர் எடுத்தவர்.

இலட்சியதில் இருந்து வழுவாத நேர்மையாளர்.

ஆனால் அவர் உள்ளத்தில் வேறு ஒரு கனல் எரிந்துகொண்டு இருந்தது!

அது கொங்கு இன உணர்வு!

அதனால் தான் அன்றே
1952- ல் "கொங்கு வேளாளர்கள் மாணவர் மன்றம்"ஆரம்பித்தார்!

எதற்காக?  எங்கு? யாரோடு?

நாளை...


கருத்துகள் இல்லை:

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...