ஞாயிறு, 31 மே, 2020

திரும்பிப்பார்க்கிறேன்- 2


இனிய உறவுகளே!

கொங்கு உணர்வுகள் எப்படி
கோவை செழியனாரின் வழியாக வந்தது என எழுதப்போகிறேன்...

இது திராவிட வரலாறு அல்ல..!


கொங்கு பேரவையின் வரலாறு...கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி விதையாக விழுந்து விருட்சகமாக விரிந்த கதை..

ஒரு நதி இதில் நடந்து வந்த பாதை!

வாருங்கள் நீங்களும் நல்ல ஒரு தொடருக்கு வடம் பிடிக்கலாம்...

நாளையும் வருவேன்...


திரும்பிப்பார்க்கிறேன்-1


இனிய கொங்கு உறவுகளே!

என் நினைவலையில் இருந்து
இனி தினமும் தொடரும்!

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வளர்ந்தவிதம் பற்றி!

மகாபாரதத்தில்
அஸ்தினாபுரசபையில் கண்ணன்
தருமனைப்பார்த்து கேட்டாராம்-

இரண்டு கெட்டவர்களை அழைத்து வா!-
என்று!

தர்மர் சொன்னாராம் -"எல்லோரும் நல்லவர்கள் கெட்டவர்களே இல்லை" என்றாராம்.

அடுத்து;

துரியோதனனைப் பார்த்து
நல்லவர்கள் இருவரை அழைத்து வா!-
என்றாராம்.

துரியோதனன் சொன்னானாம்- "நல்லவர்களே நாட்டில் கிடையாது" என்றானாம்.

"அவரவர் எண்ணங்களே அவர்களை
அடையாளம்"-காட்டும் என கண்ணனை
வணங்கி தேரை செலுத்துவோம்!

வாருங்கள்!- உறவுகளே! வடம் பிடிக்க!


ஞாயிறு, 10 மே, 2020

அறிமுகம்

இனிய உறவுகளே!

இந்த வலைத்தளத்திற்கு புதியவன்...

என்னுள் உறைந்துகிடக்கின்ற எண்ணங்களை
எழுத்து வடிவமாக இதில் இறக்கி வைக்க எண்ணுகிறேன்..

அரசியல், இலக்கியம், கிராம வளர்ச்சி, சமுதாய மாற்றங்கள் இவைகளை பற்றி இந்த வலைதளத்தில் பதிவிட எண்ணுகிறேன்.

என் ஒத்த கருத்துள்ள படிப்பாளிகளே ! படைப்பாளிகளே!
வாருங்கள்!

சேர்ந்து நின்று தேர் இழுப்போம்..
நகரும் என்ற நம்பிக்கையோடு!

என்றும் வேண்டும் உங்கள் அன்பு!

                - பூவை செல்வராஜ்

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...