செவ்வாய், 2 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே!

சட்டமன்றம் கூடுகிறது.

அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான
பட்டியலை முதல்வர் வாசிக்கிறார்.

அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்று இருக்கின்றனர்.

கவுண்டர்களுக்கு அதில் இடம் இல்லை.

இதைக்கண்டு வெகுண்டெழுந்த செழியனார் வன்னியர் முக்குலத்தோருக்கெல்லாம் இடம் இருக்கிறது. கொங்கனுக்கு ஏன் இடமில்லை?

அவன் என்ன மிட்டா? மிரசா? என
கேள்விகளால் துளைக்கிறார்.

பதில் சொல்ல முடியாத கலைஞர் அமர்ந்துவிட்டார்.

வன்னியர் இனத்தை சேர்ந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி எழுந்து-
இது சட்டசபை!
பொதுகூட்டமல்ல!-என கலைஞருக்கு
வக்காலத்து வாங்குகிறார்.

உன் சாதிக்கு கிடைத்ததால் சந்தோஷப்படுகிறாய்!
ஏன்  என் சாதிக்கு ஏன் இல்லை என்று கேட்டாயா? என வினவுகிறார்.

இத்தனை சூழ்ச்சிக்கும் காரணம்
பண்ருட்டியார்.

இனத்திற்காக எதையும் செய்ய
துணிவார்.

அடுத்து என்ன நடந்தது?

செழியனார் என்ன செய்தார்.

என்பது நாளை..


தி்.பார்க்கிறேன்-20

இனிய உறவுகளே!

சட்டமன்றம் கூடுகிறது.

அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான
பட்டியலை முதல்வர் வாசிக்கிறார்.

அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்று இருக்கின்றனர்.

கவுண்டர்களுக்கு அதில் இடம் இல்லை.

இதைக்கண்டு வெகுண்டெழுந்த செழியனார் வன்னியர் முக்குலத்தோருக்கெல்லாம் இடம் இருக்கிறது. கொங்கனுக்கு ஏன் இடமில்லை?

அவன் என்ன மிட்டா? மிரசா? என
கேள்விகளால் துளைக்கிறார்.

பதில் சொல்ல முடியாத கலைஞர் அமர்ந்துவிட்டார்.

வன்னியர் இனத்தை சேர்ந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி எழுந்து-
இது சட்டசபை!
பொதுகூட்டமல்ல!-என கலைஞருக்கு
வக்காலத்து வாங்குகிறார்.

உன் சாதிக்கு கிடைத்ததால் சந்தோஷப்படுகிறாய்!
ஏன்  என் சாதிக்கு ஏன் இல்லை என்று கேட்டாயா? என வினவுகிறார்.

இத்தனை சூழ்ச்சிக்கும் காரணம்
பண்ருட்டியார்.

இனத்திற்காக எதையும் செய்ய
துணிவார்.

அடுத்து என்ன நடந்தது?

செழியனார் என்ன செய்தார்.

என்பது நாளை...


தி.பார்க்கிறேன்-19

இனிய உறவுகளே!

1971- சட்டசபைக்கு தேர்தல்.
கலைஞர் முதல்வர் ஆகிறார். கோவை செழியனார் காங்கேய சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகிறார்.

சட்டமன்றம் கூடுகிறது.

ஏற்கனவே நிலுவையில் இருந்த தீர்மானம். கொங்கு இன மக்களை பிற்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று.

இணைப்பது சரி! அதற்கான புள்ளிவிபரங்கள் அரசிடம் இல்லை.
அதுவின்றி சட்டமன்றத்தில் பேசமுடியாது.

அப்போது சட்டமன்ற இணைச்செயலாளராக இருந்த திரு.C.K.இராமசாமி அவர்கள் அதற்காக
புள்ளி விபரங்களுக்கு அப்போதுதான் ஏற்பாடு செய்தார்.

உள்ளாட்சித்துறையின் இயக்குநரின் உதவியாளாராக இருந்த திரு.வையாபுரிக்கவுண்டர் அவர்கள்
பெருமுயற்சி மேற்கொண்டு;

கொங்கு வேளாளக்கவுண்டர் மக்கள் தொகை எவ்வளவு?
படித்தவர்கள் எத்தனைபேர்?
பொருளாதார நல்ல நிலையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?
என்று கணக்கெடுத்து தந்தார்.

அரசு 1920-ல் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதுவும் சரியான புள்ளிவிபரங்களாக இல்லை.

இந்த விபரங்களையெல்லாம் சேகரித்து சட்டமன்றத்தில் பேசினார்.

அதற்கு கலைஞர் என்ன சொன்னார்?

இதை நிறுத்த கலைஞர் கையாண்ட
ராஜதந்திரம் என்ன?

அதற்கு தடையாய்
இருந்தவர்கள் யார்?

அதற்குள் 1972- ம் வந்து விட்டது!

என்ன நடந்தது.....

நாளை..


திங்கள், 1 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-18

இனிய உறவுகளே!

பரங்கிமலையில் இதயக்கனியை பெற்ற அண்ணா;  இதயக்கனியை தமிழகத்திற்கு தந்துவிட்டு தன்னை மறைத்துக் கொண்டார்.

அரசியலில் எம்.ஜி்.ஆர் அடியெடுத்து வைத்த நேரம்.

தனிமனித வாழ்வில் ஒழுக்கங்களை
நேசித்த மனிதர் அவர்.

அரசியலில் அது இல்லாதபோது வெகுண்டெழுந்தார்.

அவர்கள் பேசும் அரசியலுக்கும் செயல்படும் அரசியலுக்கும் வித்தியாசத்தை உணர்ந்தார்.

தான் எப்போதும் நம்பும் கோவை செழியனாரிடமே இது பற்றி அடிக்கடி விவாதிப்பார்.

இனி கட்சியில் இருக்க சாத்தியமில்லை என்று முடிவெடுத்த நேரம்!

செழியனாரும் எடுக்கும் முடிவு
சரியே என ஒத்துக்கொண்டார்.

அந்த கூட்டத்தில் கோவை செழியனாரும் கலந்து கொள்கிறார்.

ஆனால் கோவை செழியனார் எம்.ஜி.ஆரோடு வரவில்லை.ஏன்?

நேர்மையின் வடிவம் தான்.
செழியனார்.

கொங்கு இனத்தவன் தன்னிடம் தந்ததை தலையே போனாலும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க மாட்டான் என்பதற்கு செழியனாரே சாட்சி.

என்ன அது?

நாளை!


தி.பார்க்கிறேன்-17

இனிய உறவுகளே!

சட்டக்கல்லூரி முதல்வர் பழனிசாமி எ.எம்.இராசா செழியனார் ஆகிய மூவரும் முழுமையான வடிவம் கொடுக்க முயற்சி செய்தார்கள்.

அன்றையஅமைச்சர் மன்றாடியார் அவர்களையும் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களையும் தலைவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களுக்கு அதில் பெரு விருப்பம் இல்லை.

செழியனார்பொருளாளராக இருக்க;
தேவண்ணன், பெருமாள், கருப்பன் ஐஏஎஸ் சென்னியப்பன் இவர்களெல்லாம் செயலாளர்களாகவும் பொருளாரகவும் வந்து சிறப்பாக செயல்பட்டார்..

இப்போது அவர் எண்ணம் சென்னைக்கு வெளியே!

கரூர் ஈரோடு உடுமலை கொங்கு நண்பர்கள் சங்கத்தை தொடங்கி வருடாவருடம்
சென்று அதன் வளர்ச்சியை கவனித்து
வந்தார்.

அந்த காலகட்டத்தில்எம்.ஜி்.ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது?

எதற்காக?

நாளை..

தி.பார்க்கிறேன்-16

இனிய உறவுகளே!

செழியனார் சென்னை வந்த நேரம்.
தொழில் செய்வதற்காக!

நாடார்களும் செட்டியார்களும் சென்னையை நோக்கி தொழில் செய்ய
வந்துகொண்டு இருந்தனர்.

நம் இனமக்களோ வெகு குறைவாகவே
சென்னைக்கு வந்தனர்.
விவசாயத்தை
விட்டு அவர்களால் வெளியேற முடியவில்லை.

அவர்கள் தங்குவதற்கு விடுதிகளை
இலவசமாகவும் குறைந்த வாடகைக்கும் ஏற்பாடு செய்து தந்து இருந்தனர்.

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்- "நகரத்தார்சங்கமும்"

நாடார்கள்-
"நாடார் மகா சபையும்"சிறப்பான உதவிகள் செய்தன.

நம் இனமக்களுக்கும் இது மாதிரியான
ஒரு விடுதி இருந்தால் என்ன என்று
யோசித்தார்.

கொங்கு இன உணர்வுள்ள நண்பர்களை தன இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை செய்தார்.

அந்த சிந்தனையின் வடிவம் தான் இன்று இராயப்பேட்டையில் உருவாகியுள்ள
"கொங்கு நண்பர்கள் சங்கம்!"

கொங்கு நண்பர்கள் சங்கத்தில்

வரலாறு நாளை...

வருவேன்..


தி.பார்க்கிறேன்-15

இனிய உறவுகளே!

1969- கோவையிலிருந்து சென்னை
வந்துவிட்டார் செழியனார்.

தொழில் செய்வதற்காக!

அண்ணாவின் தொடர்பால் இவருக்கு
திரைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

விநியோஸ்தரராக நுழைந்து தயாரிப்பாளாக உயர்ந்தவர்.

அன்றே
புரட்சி த்தலைவர் இவரை "முதலாளி" என்றே அழைப்பார்.

அந்த கௌரவத்தை இறக்கும் வரை வீட்டுக்கொடுத்ததில்லை!

தொழில் செய்ய வந்தஇடத்திலும் இன
உணர்வு? இயக்கம் ஆரம்பிக்க முயற்சி?

என்ன இது? என்பது
நாளை....


தி.பார்க்கிறேன்-14

இனிய உறவுகளே!

பிறர்க்கு சொல்லி எதையும் செய்யமாட்டார்.தான் செய்ததை பிறர்க்கு சொல்லவும் மாட்டார்.

அதனால் தான் அவர் கர்மவீரர் காமராசர்.

அப்போது இந்திய அரசியமைப்பு சட்டங்கள் அமலாகிக்கொண்டிருந்த நேரம் பாராளுமன்றத்தில்!

நேருவைப்பார்க்கிறார் காமராசர்!

பிற்படுத்தப்பட்டவர்களை ஏன் இட ஒதுக்கீட்டில் சேர்க்கவேண்டும் என்பதை விளங்கி கூறுகிறார்.

வடநாட்டு மேதாவிகள் பொருளாதார அடிப்படையில் உள்ள ஏழைகளை இதில் இணைக்கவேண்டுமென வாதிடுகிறார்கள்.போராடுகிறார்கள்.
வழக்கும் தொடுக்கிறார்கள்.

காமராசர் தந்த அழுத்தத்தால் அன்று பிற்படுத்தபட்டவர்களுக்கே இடதுக்கீடு என சட்டம் வருகிறது.

இதற்கு காமராசரே முழுமுதற் காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.

பிறகு தமிழக சட்டமன்றத்தில் என்ன நடந்தது?

நம்மை எளிதாக பிற்பட்டோர் பட்டியலில் இணைத்து கொண்டார்களா?

அதற்கு கோவை செழியனார் என்ன செய்தார்?

சூழல் மாறுகிறது. காமராசர் ஆட்சி
இழக்கிறார்.

கோவை செழியனார் குடிமாறுகிறார்.

எதற்காக?

நாளையும் வருவேன்.

தி.பார்க்கிறேன்-13

இனிய உறவுகளே!

மாநாடு போடுவது
உறுதியாகிவிட்டது காமராசரை வைத்து.

ஆனால் பணத்திற்கு
எங்கே போவது?
யாரிடமும் கையேந்தி பணம் வாங்காத
இனம் கொங்கு கவுண்டர்கள்!

இவர் மட்டும் விதி விலங்கா என்ன?

இவருடைய தந்தை பழுத்த காங்கிரஸ் காரர்.
பல்லடம் பொன்னுசாமிகவுண்டர் இவர் தந்தையின் தண்பர்.

கோவைசெழியனாரை எப்போதும் புரட்சிவாதி என்றே அழைப்பர்.

அவரிடம் இந்த செய்தியை சொல்லவே இடம் மைக்செட் பந்தல் அமைக்க அவரது இடத்தையே தந்து விட்டார்.

சேனாதிபதி கவுண்டர் பதவியில் இல்லாமல் இருந்தபோதும் நோட்டீஸ் அடித்து தந்து விட்டார்.

பல்லடத்தில் மாநாடு!

எதிர்கட்சிதலைவர் அண்ணாவும் அன்றைய முதலமைச்சர் காமராசரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

ஆனால் சிறப்புரை ஆற்றியது என்னமோ அண்ணா மட்டுமே!

பிற்படுத்தப்பட்டோர் நிலைகளை மாநிலம் வாரியாக வரிசைப்படுத்தி பேசி நாம் முதலில் செய்யவேண்டியது
இந்திய அரசு நம்மை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என முடிக்கிறார்.

இறுதியாக காமராசர் சிறப்புரை ஆற்ற
வருகிறார்!

கூட்டம் ஆவலுடன் கைதட்டுகிறது.

சரி!-பார்க்கலாம்-  என்று சொல்லி இறங்கி விடுகிறார்.

காமராசர் பார்தாரா?

என்ன நடந்தது?

என்பது நாளை...



தி.பார்க்கிறேன்-12

இனிய உறவுகளே!

அண்ணா கோவைசெழியனாரை தன்
இல்லத்திற்கு அழைக்கிறார்.

செழியனாரின் கோரிக்கைகளை அனைத்தையும் கவனமுடன் கேட்கிறார்.

பிற்பட்டோர் பட்டியலில் எங்கள் இனத்தை சேர்க்கவேண்டும் என்பதே தலையாயக்கோரிக்கை என்கிறார்.

முதலில் இது பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்.பிறகே சட்டசபையில் இது பற்றி பேசமுடியும் என்கிறார்.

இதற்கு காமராசரை அழைத்து மாநாடு
போடு! என்கிறார் அண்ணா!

மாநாடு நடந்ததா?
காமராசர் கலந்து கொண்டரா?

நாளை...
வருவேன்..


திரும்பிப்பார்க்கிறேன்-11

இனிய உறவுகளே!

1952- இந்திய அரசிலமைப்பு சட்டம்
இயற்றப்பட்ட நேரம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மலைவாழ்மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார உதவிகள் வழங்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டன.

பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையோ
மிகவும் மோசமாக இருந்தது.
நாமோ முன்னேறிவர்களின் பட்டியலில்...??

அதுதான் சரியென்று மன்றாடியாரும் சி.எஸ் அவர்களும் வாதிடுகிறார்கள்
சட்டசபையில்.

இதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே கோவை அரசினர்கல்லூரியில் நண்பர்.வீ.கே. லட்சுமணன் துணையோடு மாணவர் மன்றத்தை ஆரம்பித்தார்.

இந்திஎதிர்ப்பு எரிந்துகொண்டு இருந்த நேரம்!

இந்த நேரத்தில் வாழ்வுரிமை போராட்டத்தை கையில் எடுக்கிறாரே என்று பயந்து அண்ணா அழைத்தார்.

எதற்காக? என்ன நடந்தது?

நாளை..


திரும்பிப்பார்க்கிறேன்-10

இனிய உறவுகளே!

தமிழர் என்ற இனவுணர்வை எங்கும் எழுப்பி ஆட்சி அதிகாரத்திற்கு வர திமுக திட்டமிட்டு தன் பரப்புரை தமிழமெங்கும் எழுப்பி வந்தது.

அதை எழுப்பும் தலைவர்களுள் இளைய
தலைவர்களாக சம்பத் கலைஞர் செழியனார் நாவலர் போன்ற சம காலத்தலைவர்கள் இருந்தார்கள்.

ஒவ்வொரு பிரிவாக பிரித்து அதற்கென செயலர்களை நியமித்து பணி செய்தனர்.

மாணவர்கள் அமைப்பே அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்ற கருத்தை ஆணித்தரமாக முன் வைத்தார்.

எடுத்து வைக்கும் கருத்தில் 100% உறுதியாய் இருப்பார். ஏற்காவிடினும்
எடுத்த கருத்தில் என்றும் தன்னை சமரசம் செய்து கொள்ளமாட்டார்.

கொண்ட கொள்கையில் பிடிவாதக்காரர் என பெயர் எடுத்தவர்.

இலட்சியதில் இருந்து வழுவாத நேர்மையாளர்.

ஆனால் அவர் உள்ளத்தில் வேறு ஒரு கனல் எரிந்துகொண்டு இருந்தது!

அது கொங்கு இன உணர்வு!

அதனால் தான் அன்றே
1952- ல் "கொங்கு வேளாளர்கள் மாணவர் மன்றம்"ஆரம்பித்தார்!

எதற்காக?  எங்கு? யாரோடு?

நாளை...


திரும்பிப்பார்க்கிறேன்-9

இனிய உறவுகளே!

ஆட்சி அதிகாரத்திற்கு வரும் கட்சிகள்
தன் அடிப்படைக்கொள்கைகளை பதவி
ஆசைக்காக அவைகளை இழக்க தயங்குவதில்லை.

அரசியலில் வேண்டாம் என்று  பேசியதைக்கூட ஆட்சிக்கு வந்தவுடன்
வேண்டும் என்ற நிலைக்கு வந்து விடுகின்றன.

இனஉணர்வை பேசினார்கள் -அதிகாரத்திற்கு வந்தவுடன் அவைகளை மறந்துபோனார்கள்.

திராவிடநாடு கேட்டார்கள்-
கட்சி தடை செய்யப்படும் என்றவுடன் கொள்கையை துறந்தார்கள்.

சாதியே கூடாது என்றார்கள்-
ஆட்சி அதிகாரம் ஆள்எடுப்பு அனைத்திலும்
சாதிக்கு முக்கியத்துவம் தந்தார்கள்.

இதைக் கவனித்த கோவைசெழியனார்
இனி...


வெற்று அரசியல் பேசி புண்ணியமில்லை!

நம் இனத்தை உயர்த்த நாம் ஒன்றுபட
என்ன வழி என யோசித்தார்....

நாளை...


திரும்பிப்பார்க்கிறேன்-8

இனிய உறவுகளே!

1987-2016
இரண்டு கட்சிகளின் ஆட்சிக்காலம்.

மூன்றுமுறை இருவரும் மாறிமாறி!

திமுக- வின் செல்வாக்கு பெற்ற பகுதிகளாக கொங்கு மண்டலம் விளங்கியதுண்டு.

இன்று அதிமுக- வின் கோட்டையாக கொங்குமண்டலம் விளங்கிவருகிறது.

இரண்டு கட்சிகளிலுமே அதிகார மையங்களாக கவுண்டர்கள் இருந்த காலமுண்டு.

ஜெ- அமைச்சரவையில் ஐந்து கவுண்டர்கள் கொடிகட்டிப்பறந்தார்கள்.

பறக்கத்தான் முடிந்ததே தவிர கொங்கு
பகுதிக்கு அவர்களால் எந்த நன்மையும் விளைந்துவிடவில்லை.

தனியார் ஏலமுறையை ஒழித்து டாஸ்மார்க் ஏற்படுத்தியதே இவர்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியதுறை!

புதிதாக தொழில்களோ வேலைவாய்ப்பிற்கான திட.டங்களையோ இவர்களால் உருவாக்க முடியவில்லை!

இலவசம் மானியம் அரசு ஊழியர் சம்பளம் இதற்கே வருகிற வருவாய் செலவாகி விடுகிறது.

இன்றைய கொங்குப்பேரவையின் தேவை என்ன?

நாளை..


திரும்பிப்பார்க்கிறேன்-7

இனிய உறவுகளே!

1977-1987
எம்.ஜி.ஆரின் காலம்!-இது இலவசங்களின் காலம்!

அரசியல் வானில் அவர் இறக்கும் வரை
அசைக்க முடியாத மக்கள்சத்தியாய்
விளங்கினார்.

இலவச மின்சாரம்; இலவச சத்துணவு
இவர் காலத்திய திட்டங்கள்!

பரம்பரையாய் பார்த்த மணியக்காரர்களைகளை கிராம நிர்வாக அலுவலராக மாற்றியது இவர்காலத்தில் தான்.

இலவச சத்துணவுக்காக நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது
இவர் காலத்தில் தான்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டுமென விரும்பினார்.ஆனால் அதை
கோவைசெழியனார் விரும்பாததால்
விட்டுவிட்டார்.

கோவை செழியனாரை முதலாளி
என்றே அழைப்பார்.

செழியனார் சொன்னதை கேட்டார்.
என்ன என்பதை -


நாளை!

                    


திரும்பிப்பார்க்கிறேன்-6


இனிய உறவுகளே!

1967-1977
இது கலைஞரின் ஆட்சிக்காலம்.

காமராசர் விதைத்து வைத்ததை கலைஞர் அறுவடை செய்த பொற்காலம்.

சேவை மனப்பான்மை மறைந்து சுயநல
மனபான்மை தலைதூக்கிய காலம்.

விவசாயம் ;தொழில்;கல்வி;சுதாதாரம் போன்ற துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டதால் வேலைகளுக்கு ஆள் தேவைப்பட்டது.

யாருக்கு வேலை தருவது?
எதன் அடிப்படை யில் வேலை தருவது என்பதை அன்றைய கலைஞர் அரசே
தீர்மானித்தது.

அதிலும் அந்த அந்த துறை அமைச்சர் களே தீர்மானித்தார்கள்.

இன்றும் அரசு ஊழியர்கள் கலைஞர் மீது பாசம் வைத்திருக்க இதுதான் காரணம்.

இதிலே கலைஞரின் சுயநலமும் அடங்கி இருக்கிறது.

யாருக்கு வேலை கொடுத்தால் வாக்குசாவடியில் நமக்கு சாதகமாக இருப்பார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே பணிகளுக்கான சாதிகளை முடிவு செய்தார்.

காமராசர் ஆட்சியில் எப்படி இராமசாமி படையாச்சி இருத்தாரோ அதுபோல
பண்ருட்டியார் கலைஞர் ஆட்சியில் கதாநாயகனாக விளங்கினார்.

வேளையில் இட ஒதுக்கீடு எப்படி நடந்தது?

கோவை செழியனார் என்ன சொன்னார் சட்டசபையில்.

என்பது நாளை!

                    வருவேன்


திரும்பிப்பார்க்கிறேன்-5

இனிய உறவுகளே!

1952- 1967
தமிழகத்தை புணரமைப்பு செய்த
காலம்!

உண்ண உணவில்லை! உடுத்த உடையில்லை! குடி இருக்க வீடே இல்லை! அடுப்பு எரிக்க விறகு இல்லை!

எலிக்கறியை தின்ன சொன்ன தேசம்.

இதுதான் இந்தியசுதந்திரம் நமக்கு
தந்த பரிசு!

பசிப்பிணியைப் போக்க பசுமைப்புரட்சி
ஏற்படுத்தினார்.சி.எஸ்!

கதர்ஆடை கிடைக்க இராட்டைகளை வீடுதோறும் கொண்டு சேர்த்தார் காமராசர்.

சுகாதாரமும் தொழிலும் பெருக வளர்ச்சிபெற்ற இந்தியாவாக மாற்றினார் வெங்கட்ராமன்.

கூட்டு முயற்சியாக கல்வியை கிராமம்
எங்கும் விதைத்தனர்.

இவையெல்லாம் பெருகும் போது
புதிய பிரச்சினை ஒன்று விஸ்வரூபம்
எடுத்தது!

அதற்கு கோவை செழியனார்.,...

நாளை..

                              வருவேன்.



திருப்பிப்பார்க்கிறேன்-4


இனிய உறவுகளே!

சுதந்திரமடைந்து முதல் தேர்தல் 1952!

பார்ப்பனர்களே இந்திய அரசியலை
நிர்ணயித்த காலம்!

அவர்களுக்கு எதிராக மாற்று சாதியினர் அரசியலில் அங்கம் வகிக்க
முயல்கின்றனர்.

சாதி இல்லாமல் அரசியல் இல்லை
என்ற நிலை உருவாகிறது.

காமராசர் தலைமையில் அமைச்சரவை
கூடுகிறது.

சி. சுப்பிரமணியம் அவர்கள் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறர்.

இராமசாமி்படையாச்சி அவர்கள் வன்னியர் தலைவராக அறியப்பட்டு
உழவர் உழைப்பாளர் கட்சி என்தொடங்கி காமராசர் அமைச்சரவையில் இடம்பெறுகிறார்.

இதையெல்லாம் கூர்ந்து கவனித்த
கோவை செழியனார் நமக்கும் ஒரு
சாதி சங்கம் இல்லாமல் முன்னேற முடியாது என எண்ணுகிறார்.

இனி.……
           நாளை...
                               வருவேன்!


திரும்பிப்பார்க்கிறேன்-3


இனிய உறவுகளே!

இந்திய பிரிவினைக்கு பிறகு அண்ணா
திராவிட நாடு திராவிடர்க்கே- என
ஓங்கி குரல் கொடுத்தார்.

அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள் சற்று கலங்கிப்போனார்கள்.

ஆனாலும் அண்ணா அவர்களை இழக்க
விரும்பவில்லை.

அவர்கள் தேசிய நீரோட்டத்தின் மீது
தீராத பற்றுக்கொண்டவர்கள்..

இதயக்கனி எம்.ஜி.ஆர்.; சம்பத்(இளங்கோவனின் அப்பா) கண்ணதாசன்; கோவை செழியனார்
இவர்கள் நான்வரும்!

எம்ஜி ஆர்  அண்ணாவிற்கு பிறகு கலைஞரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புது கட்சி கண்டார்.

மற்ற மூவரும் தேசிய நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு வலம் வர துவங்கினர்.

இதன் மறுமலர்ச்சியாக மக்கள் தமிழ் தேசிய
கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினர்.

இதன் விதைதான் இன்றைய "கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி"

                                            வருவேன்


தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...